‘ரெட்ரோ’ முதல் பாதி ஓகே... அப்போ 2ம் பாதி?! எங்கே சறுக்கியது... முழு திரை விமர்சனம்!

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) - சந்தியா (ஸ்வாசிகா) தம்பதியர். பாரிவேல் மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார்.
தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை முன்னின்று செய்யும் பாரி, தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் கடத்தல் விவகாரம் ஒன்றில் தந்தைக்குத் தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் பாரிக்கும் திலகனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதில் காதலி கண்முன்னே வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டியதால் பாரியின் திருமணம் நின்று போகிறது, காதலியும் கோபித்துக் கொண்டு பாரியை விட்டுப் பிரிந்து வேறு மாநிலத்துக்கு சென்று விடுகிறார்.
சிறையில் இருக்கும் பாரியின் சண்டை போடும் திறனை கண்டு அவரை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது ஒரு கும்பல். இதற்காக அவரை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்கிறது. ஆனால் அந்த கும்பலை அடித்துவிட்டு தப்பிக்கிறார் பாரி.
ஒரு பக்கம் பாரியை தப்பிக்க வைத்து கும்பல் தேட, இன்னொரு பக்கம் வளர்ப்பு தந்தையின் ஆட்கள் தேட, தன் காதலியை தேடி புறப்படுகிறார் பாரி. காதலியுடன் அவரால் சேர முடிந்ததா? பாரியை தேடிக் கொண்டிருக்கும் கும்பலின் பின்னணி என்ன என்பதே ‘ரெட்ரோ’ திரைக்கதை.படம் முழுக்கவே ஆக்ஷனுக்கான களம் என்றாலும் காதல் கோணத்தில் எழுதியிருந்த விதம் ப்ளஸ். படத்தில் ஆக்ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகள் ஈர்த்து ரசிக்க வைக்கின்றன.
‘கனிமா’ பாடலுடன் சேர்த்து வரும் சிங்கிள் ஷாட் காட்சியில் ஒட்டுமொத்த படக்குழுவும் உழைப்பை கொட்டியிருப்பது பலனளித்திருக்கிறது. தியேட்டரில் ரசிக்கிறார்கள்.படம் முழுக்கவே சூர்யாவின் ராஜ்ஜியம்தான். காதல் காட்சிகளில் பூஜாவிடம் உருகுவது, ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களிடம் ஆக்ரோஷம் காட்டுவது என வெரைட்டி காட்டி ஈர்க்கிறார். தன்னுடைய மேனரிசங்களை எல்லாம் ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு, பழைய சூர்யாவாக, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.
பூஜா ஹெக்டேவுக்கு முக்கியமான கதாபாத்திரம். ஜோஜு ஜார்ஜு வில்லன் கேரக்டரில் நிறைவை தந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜெயராம், நாசர் சம்பந்தமே இல்லாமல் நட்சத்திர பட்டாளமாக வந்து செல்கிறார்கள். படத்தின் மற்றொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படம் முழுக்க பின்னணி இசையில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் தீவுக்கு ஹீரோ செல்லும்போது கதையும் வேறொரு பரிமாணத்துக்கு செல்கிறது. ஆனால் அதுவே படத்தின் மைனஸாகவும் அமைந்து விடுகிறது. ஆங்கிலேயர் காலத்து அடிமை முறை, மிராசுதாரர் குடும்பம், ரப்பர் தொழிலாளர்கள், என இஷ்டத்துக்கு எழுதப்பட்ட திரைக்கதை சலிப்பை தருகிறது. அதன் பின்னர் நெளிய துவங்கும் ரசிகர்கள் கடைசி வரை நெளிந்தபடியே இருக்கிறார்கள். முதல் பாதி காதல் காட்சிகளில் இருந்த எமோஷனல் அம்சங்களில் பாதி கூட இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.அடிமைகளை மீட்கும் ரட்சகன், மகாபாரத குறியீடுகள் எல்லாம் இருந்தாலும் திரைக்கதை நேர்த்தியாக இல்லாமல் பெரிய சறுக்கல்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!