பற்றி எரியும் வீடுகள்!! போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை!! மணிப்பூரில் மீண்டும் கலவரம்!!
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தின் இரு பிரிவுகளுக்கிடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் மே 3ம் தேதி கலவரமாக வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 120 பேர் உயிரிழந்தனர். 3000 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் பள்ளிக்கும், கல்லூரிக்கும், பணிக்கும் செல்பவர்கள் ஆயுதம் ஏந்தி திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில், மோதலை தூண்டும் வகையில் வதந்தி பரவி விடாமல் தடுக்கும் வகையில் 3ம் தேதி முதல் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடித்து வருகிறது. அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவ்வப்போது கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளி இரு நாட்களும் இரவு நேரத்தில் மலைப்பிரதேச பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்த கும்பல் ஒன்று கிராமவாசிகள் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
கிராமங்களில் குடிசைப் பகுதிகளில் தீவைத்தது. அவர்களை திரும்பி போகும்படி கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர். கும்பல் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டது. அவர்கள் வீடுகள் மீது மேலும் தாக்குதல் நடத்தி விடாமல் காவல்துறையும், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளனர். மற்றொரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் கங்வாய் பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர், டீன்-ஏஜ் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். சிலர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனால், மீண்டும் மணிப்பூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!