எகிறும் எதிர்பார்ப்பு... 'ஜனநாயகன்' ரிலீஸ் ஆகுமா? இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறி தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் காரணமாக, தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததுடன், படத்தை மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. தனி நீதிபதி, "உடனடியாகச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார். ஆனால், சென்சார் வாரியம் மேல்முறையீடு செய்ததில், அந்த உத்தரவிற்கு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது.

உயர் நீதிமன்றத் தடையால் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போனது. இதையடுத்து, படக்குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கினால், பொங்கல் விடுமுறை நாட்களிலேயே 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளது.
ஒரு படத்தின் தணிக்கையில் சென்சார் வாரியத்தின் அதிகாரம் எந்த அளவிற்கு இருக்கலாம் என்பது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை இந்தத் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
