அதிர்ச்சி... 20% பற்றாக்குறை... தமிழகத்தில் அரிசி விலை உயரும் அபாயம்!

 
அரிசி ஆலை

இந்த பருவ காலத்தில் இருபது சதவீதம் நெல் பற்றாக்குறை உருவாகி இருப்பதால், தமிழகத்தில் விரைவில் அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அரிசி வரத்து குறைந்துள்ளதால் அரிசி வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அரிசி சப்ளை செய்யப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்தும், திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், காட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உள்ளனர்.தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல ஊர்களில் வெள்ளம் சூழந்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே போன்று டெல்டா மாவட்டங்களில் நீர் வரத்து குறைவால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 

அரிசி

வழக்கத்தை விட இந்த வருடம் பல மாவட்டங்களில் விவசாயிகள் இரண்டாவது போகத்திற்கு நெல் சாகுபடிக்கு செல்லவில்லை. வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பல இடங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அவதியுற்றனர்.தமிழகத்திற்கு அதிக விளைச்சலைத் தரும் தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் இம்முறை பெரும்பாலான விவசாயிகள் சம்பா பருவ சாகு படியை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் வரத்து இந்த வருடம் மேலும் சரியும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடக பொன்னி என்று பிரபலமாக அழைக்கடும் 1 கிலோ ஆர்.என். ஆர். அரிசி ரூ. 46-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது சில்லறை சந்தைகளில் ஒரு கிலோவுக்கு ரூ. 55 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், மணச்சநல்லூர் பொன்னியின் விலையும் (ஒரு வருட ரகம்) கிலோ ₹65 ஆக உள்ளது.

தூத்துக்குடி

மொத்த சந்தையில் பொதுவான அரிசி வகைகளின் விலை (அளவில் பெரியது) கிலோ 46-ல் இருந்து 51 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக டெல்டா பகுதியில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.வரும் ஆண்டில் அடுத்த சம்பா பருவம் வரை பொன்னி போன்ற பிரபலமான ரகங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் சப்ளையை இப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வணிகர்கள் சார்ந்திருக்க வேண்டும் என்றார். இதனால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web