ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு?

சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் 2013ல் எம்.எஸ். தோனி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா வென்றுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே இத்தொடருடன் ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகின.
2024 வெஸ்ட்இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். அதனால், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றால், கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த ஊகங்கள் அனைத்துக்கும் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஐசிசி கோப்பை பரிசளிப்பு விழாவில் ஓய்வு குறித்து ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்படது. இதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, "ஒரு விஷயத்தை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது ஓய்வு பற்றிய கேள்விக்கே இடமில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெற போவதில்லை. இதன்மூலம் என்னுடைய ஓய்வு பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்" என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!