இனி தரிசன டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே திருமலை திருப்பதியில் அறைகள் ... தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!

உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதியில் தரிசன டிக்கெட்டுகள் மாதம் தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.அதே நேரத்தில் அவர்களுக்கு தங்குவதற்கான அறைகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருமலையில் விஐபிக்களுக்கு அறைகள் ஒதுக்குவதற்கான புதிய கொள்கையை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. தரிசன டிக்கெட்டுகள் அடிப்படையில் மட்டுமே விஐபி பக்தர்களுக்கு மட்டுமே தங்குமிடம் வழங்கப்படுகிறது. திருமலை முழுவதும் மொத்தம் 7,500 அறைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் 3,500 அறைகள் சி.ஆர். இ. அலுவலகத்தில் இருந்து நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
1,580 அறைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு முன்பதிவு செய்வதற்கும், 400 அறைகள் நன்கொடையாளர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. 450 அறைகள் வருகைப் பதிவுக்கு உட்பட்டவையாக வழங்கப்படுகின்றன. மீதமுள்ள அறைகள் நேரடியாக வரும் விஐபிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை பத்மாவதி விசாரணை மையம், எம்பிசி மற்றும் டி.பி.சி. கவுண்டரிலிருந்து பெற வேண்டும். இந்த கவுண்டர்களில் தரிசன டிக்கெட்டுடன் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், ஆதாரைப் பயன்படுத்தி புரோக்கர்கள் விஐபி அறைகள் அதிக அளவில் வாங்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த அறைகளை அவர்கள் 48 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்பதால், அவை இரண்டு அல்லது மூன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கப்படுகிறது. எனவே தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் உடனடியாக அறைகளை காலி செய்வதால் மற்றொரு அரை மணி நேரத்திற்குள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தேவஸ்தானத்திற்கு வருமானமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!