தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு!

 
பகவந்த் மான்

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனத்தில், ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 

பகவந்த் மான்

அப்போது மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. சம்பவத்தில் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பகவந்த் மான்

மேலும் படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web