2,000 பேருக்கு ரூ.1 கோடி மானியம்... மாவு அரைக்கும் எந்திரம் வாங்க ஒதுக்கீடு... அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!

மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவு அரைக்கும் எந்திரம் வாங்குவதற்கு 2 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்குவதற்காக மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் கீதாஜீவன் சட்டசபையில் அறிவித்தார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படும் 43 ஆயிரத்து 131 சத்துணவு மையங்களில் பயன்பெறும் 42.71 லட்சம் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.61.61 கோடி கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் செயல்படும் சத்துணவு மையங்களில் 25 பயனாளிகளுக்கும் அதிகமாக பயன்பெறும் 25 ஆயிரத்து 440 சத்துணவு மையங்களுக்கு ரூ.9.66 கோடி மதிப்பில் எரிவாயு அடுப்புகள் புதிதாக வழங்கப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான எந்திரங்கள் வாங்கும்போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியத்தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2 ஆயிரம் மகளிருக்கு மொத்தம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!