உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை!

 
மாணவர்கள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை புதுச்சேரியின்  நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 
 முக்கிய அறிவிப்புகள்  
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2000

புதுச்சேரி


குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை 
அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி தினந்தோறும் வழங்கப்படும். 
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். 

புதுச்சேரி


புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். 
மீனவ சமுதாய ஈமச்சடங்குகளுக்கான நிதி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும். 
மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web