ரூ.1.06 லட்சம் பறிமுதல்.... வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

தூத்துக்குடி மாவட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொறியாளர் பிரிவில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளுக்கான நிதி அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரையில் நிதி அனுமதிக்கப்படும்.
இங்கு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்சம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு- கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இப்பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர் அன்னலட்சுமி, ஆய்வுக் குழு அலுவலர் வானமாமலை உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர், இந்த அலுவலகத்தின் பொறியாளர் பிரிவில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாலைவரை நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.1.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!