கோவையில் ரூ.208 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா... இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
செம்மொழி ஸ்டாலின் கோவை

கோவை மக்களின் நீண்ட நாள் கனவான செம்மொழிப் பூங்காவைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார். இது தவிர, கோவையின் தொழில்முனைவோர்களுடன் அவர் கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்கிறார்.

கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள், காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

ஸ்டாலின்

பின்னர், 2021 ஆம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்தப் பூங்கா திட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208½ கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்தத் திட்டத்திற்கு 2023 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிவடைந்துள்ளன.

கோவை மக்களின் புதிய பொழுதுபோக்குத் தலமாக அமைய உள்ள இந்தப் பூங்காவைத் திறந்து வைக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.05 மணிக்குச் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 11.15 மணிக்குக் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர்.

வரவேற்பு முடிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் காந்திபுரம் சென்று 11.45 மணிக்குச் செம்மொழிப் பூங்காவைத் திறந்து வைக்கிறார். அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள செம்மொழி வனம், மூலிகைத் தோட்டம், புதிர்த் தோட்டம், ஆரோக்கிய வனம், நீர் வனம், பாறை வனம், பூஞ்சோலை மற்றும் மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் பார்வையிடுகிறார். அத்துடன், அங்குள்ள நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு ரசிக்க உள்ளார்.

ஸ்டாலின்

தொடர்ந்து, செம்மொழிப் பூங்காவில் உள்ள அரங்கத்தில் பள்ளி மாணவர்கள், கோவை தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என முக்கியப் பிரமுகர்கள் 150 பேருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வை முடித்துவிட்டு, மதியம் 1 மணிக்கு அவர் கோவையில் உள்ள தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் செல்கிறார்.

பின்னர் மாலை 5 மணியளவில் நடைபெறும் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் நடத்தப்படும் 'டி.என். ரைசிங்' (TN Rising) என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அப்போது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ள உள்ளது. முதல்வர் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!