ரூ.2,500 உயரும் மகளிர் உரிமை தொகை? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்... இன்று முக்கிய முடிவு? எகிறும் எதிர்பாப்பு?!

 
அமைச்சரவை
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைஅமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில், இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தின் 2025-26ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், வணிக அமைப்புகளிடம் கருத்துகளை கேட்டு வந்தனர். 

அமைச்சரவை கூட்டம்

இதேபோல், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகள், விவசாய சங்கங்களிடம் கருத்துகளை விரைவில் கேட்டறிந்து உள்ளார்.  முன்னதாக, வேளாண் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பிப்ரவரி 25ம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்களுக்கும், தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் புதிய அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய அறிவிப்புகளில் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் பொதுமக்களை குறிப்பாக மகளிரை கவரும் விதத்தில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவை

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள், மாணவர்கள் தொடர்பான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மும்மொழிக் கொள்கை பிரச்சினை, தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

அதே போன்று அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் குறித்தும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்காலிக அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் என அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையிலும் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web