சொத்து வரி பெயர் மாற்ற ரூ.4,000 லஞ்சம்... பில் கலெக்டர் கைது!

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை மாநகராட்சியில் சொத்து வரி பெயர் மாற்ற, ரூ.4,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பொறி வைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் பாலசிங்கம். இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்து வரியை தனது பெயரில் மாற்றுவதற்காக பில் கலெக்டர் காளி வசந்த் (27) என்பவரை அணுகி உள்ளார்.
இதற்கு காளி வசந்த், சொத்து வரியை பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், ரூ.4,000 லஞ்ம் தர வேண்டும் என்று கறார் காட்டிக் கேட்டுள்ளார். இதனைக் கொடுக்க விரும்பாத பாலசிங்கம், லஞ்ச ஒழிப்பு போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.
இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.4,000 லஞ்சப்பணத்தை பாலசிங்கத்திடம் இருந்து வாங்கிய காளி வசந்த்தை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!