1,415வது நாளிலும் ஓயாத போர்: கீவ் மீது ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்!
உக்ரைன்–ரஷியா இடையேயான போர் இன்று 1,415வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நீண்ட போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவரது முயற்சிகளையும் மீறி போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இன்னும் தீவிரமாகவே உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். போர் முடிவடையும் அறிகுறிகள் இன்னும் தெரியவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
