கீவ் மீது மீண்டும் ரஷிய தாக்குதல்… 3 பேர் பலி!
Jan 9, 2026, 11:15 IST
உக்ரைன் – ரஷியா இடையே போர் இன்று 1,415-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நீண்ட போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கிடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு தரப்பிலும் பதற்றம் குறையாமல் உள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று இரவு ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
