திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்பியதில் சோகம்... லாரி மோதி நடன கலைஞர்கள் உயிரிழப்பு!

 
நடன

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு விட்டு, திரும்பிய போது லாரி மோதியதில் நடன கலைஞர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்தவர் பிரஜ்வல் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் சகானா (21). நடன கலைஞர்களான இவர்கள் இருவரும் சில சினிமா படங்களில் பாடல்களுக்கு நடனமாடி உள்ள நிலையில், திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் நடனமாடி வந்தார்கள்.

பள்ளி மானவி தற்கொலை

இந்நிலையில் துமகூரு மாவட்டம் குனிகல்லில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் இரவு இருவரும் பைக்கில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். இரவு 11.30 மணியளவில் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே பெங்களூரு-குனிகல் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில் வந்த லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்திற்குள்ளானதில். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரஜ்வல், சகானா ஆகியோர் பலத்தகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

பைக்

இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் நெலமங்களா போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது லாரியை டிரைவர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

இது குறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது