சோகம்... ரூ.10,000 பந்தயத்திற்காக 5 பாட்டில் மது குடித்த 21 வயது இளைஞர் மரணம்!

 
கார்த்திக்
ரூ.10,000 பந்தயத்திற்காக 5 பாட்டில் மது குடித்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் தான் உயிரிழந்த கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். 21 வயதான கார்த்திக், தனது நண்பர்களான வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரிடம் மதுவில் தண்ணீர் கலக்காமல் ஐந்து முழு பாட்டில் மதுபானத்தை குடிக்கலாம் என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து வெங்கட ரெட்டி, கார்த்திக்கிடம் அப்படி குடிக்க முடியாது என்று கூறி ரூ.10,000 பந்தயம் கட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து 5 பாட்டில் மதுபானத்தை குடித்த கார்த்திக்கின் உடல் நிலை மோசமானது.

இதனையடுத்து நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், கார்த்திக்கின் மனைவி பிரசவத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், கடந்த வாரம் தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

கார்த்திக் உயிரிழந்தது தொடர்பாக வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 6 பேர் மீது நங்கலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web