சோகம்.. பிரசவம் முடிந்து வீடு திரும்பிய தாய்...குழந்தை, கணவன் குடும்பத்தோடு பலி!

 
சுமதி

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையைச் சேர்ந்த சுமதி(25), பிரசவத்துக்காக கடந்த 17ம் தேதி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். சுமதி தனது கணவர் சின்ன அடைக்கன்(28), தாயார் காளியம்மாள்(50), பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் நேற்று ஆட்டோவில் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், உச்சிப்புளி நதிப்பாலம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் மற்றொரு வாகனத்தை முந்த முயன்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ தூக்கிவீசப்பட்டு உருக்குலைந்தது.

சுமதி

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்த சுமதி, ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் (52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் சிசு, சின்ன அடைக்கன், காளியம்மாள் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆண் சிசு மற்றும் சின்ன அடைக்கன் ஆகியோர் உயிரிழந்தனர்.

சுமதி

இது தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சென்னை சேலையூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷ்(34) என்பவரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை பிறந்து சொந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்பே பச்சிளம் குழந்தை, அதன் தாய், தந்தை ஆகியோர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 
 

From around the web