சாகுற வயசா... 13 வயது மாணவி மாரடைப்பால் மரணம்!
சாகுற வயசா இது என்று அந்த கிராமம் முழுக்கவே மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். நல்லா தான் தோழிகளோட விளையாடிக்கிட்டு இருந்தா. அதுக்கப்புறமா வந்து தூங்கிக்கிட்டு இருந்தவ நெஞ்சு வலின்னு சொல்லி, அப்படியே சாய்ஞ்சுட்டா என்கிறார்கள் ஊர் மக்கள். 13 வயசுல பள்ளி மாணவிக்கு மாரடைப்பு வருதுன்றதெல்லாம் எந்த துயரத்துல சேர்க்கறதுன்னு தெரியலை என்று அரற்றுகிறார்கள். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து ஊர்மக்கள் மீளவில்லை.
தெலங்கானா மாநிலம் அப்பைபாலம் கிராமத்தைச் சேர்ந்த லகபதி - வசந்தி தம்பதியரின் மகள் ஸ்ரவந்தி. மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்த மாணவி.
இந்நிலையில், ஸ்ரவந்தி கடந்த வியாழக்கிழமையன்று பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டின் அருகே தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் லேசாக சிரமம் இருந்துள்ளது. அப்படியே தூங்க போயிட்டாள். அடுத்த நாள் அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக தனது பாட்டியிடம் இதனைக் கூறினார்.
சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்ததால், அவரது பாட்டி சிறுமியின் தந்தை லகபதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.13 வயது சிறுமி மாரடைப்பால் இறந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!