சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ1.04 கோடி! 2 கிலோ 55 கிராம் தங்கம்!

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர்.
அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை உண்டியல்களை கோவில் நிர்வாகம் மேற்பார்வையில் மாதம் இருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது. இம்மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் உண்டியல்களில் சேர்ந்திருந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ 1கோடியே 4 லட்சத்து 73ஆயிரத்து 444 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 55 கிராம் தங்கம், 3 கிலோ 80 கிராம் வெள்ளி , அயல்நாட்டு நோட்டுகள் 235ம், அயல்நாட்டு நாணயங்கள் 1,812 காணிக்கையாக பெறப்பட்டன என கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தெரிவித்தார். 9 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 2 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி காணிக்கையாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க