திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் மார்ச் 6ல் சனிப்பெயர்ச்சி விழா!

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வரும் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மார்ச் 6ம் தேதி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். அடுத்தாண்டு மே 23ம் தேதி கோயில் கொடியேற்றமும், ஜுன் 6ல் திருத்தேரோட்டமும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின.
ஆனால் கோவில் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இது குறித்த திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!