ஓபிஎஸ் முடிவு துரதிர்ஷ்டம்... சசிகலா ஆவேசம்!
சட்டமன்றத் தேர்தலில் தனி அணியாக களம் இறங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த இணைவு பல தரப்பில் அதிர்வுகளை கிளப்பியுள்ளது. இதுகுறித்து வி.கே. சசிகலா தனது சமூக வலைதள பதிவில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
— V K Sasikala (@AmmavinVazhi) February 27, 2026
தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய்…
தமிழக முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என சசிகலா குறிப்பிட்டுள்ளார். திமுகவை தமிழகத்தில் அகற்ற வேண்டிய சக்தி என கூறிய அவர், அதையே தாய்க் கழகமாக நினைத்து இணைந்தது தவறான முடிவு என விமர்சித்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு காரணம் சிலர் மேற்கொண்ட செயல்களே என்றும் சுட்டிக்காட்டினார்.
தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஏமாற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுவோர் விரைவில் அரசியல் தோல்வியை சந்திப்பார்கள் என சசிகலா எச்சரித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது தலைமையில் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவோம் எனவும் அவர் உறுதிமொழி எடுத்துள்ளார். இந்த பதிவு அதிமுக வட்டாரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
