தயார் நிலையில் செயற்கைகோள்... பலத்த பாதுகாப்பு.. இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லத்தடை!
இன்று காலை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஈ.ஓ.எஸ் என்-1’ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் தொடங்கிய நிலையில், அந்த பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து, ‘பி.எஸ்.எல்.வி-சி62’ ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியுள்ளது.

விண்வெளி ஏவுதலை முன்னிட்டு, ஸ்ரீஹரிகோட்டா அருகே திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
