அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

 
அனல்மின் நிலைய இழப்பீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் இறந்த அனல்மின் நிலைய பொறியாளர் குடும்பத்திற்கு ரூ.1கோடியே 30 லட்சம் நஷ்டஈடு வழங்க திருநெல்வெலி மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூர் தாலூகா சேர்ந்தமங்களம் மறவர் தெருவை சார்ந்த அய்யாகண்ணு மகன் கணேஷ் (46), என்பவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 22.11.2019 அன்று தெர்மல் கேம்ப் -1 அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் அடைந்தவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே இறந்து போனார்.

அனல் மின் நிலையம்

அவரது இறப்பு குறித்து அவரது மனைவி ராஜசெல்வம், அவரது இரு மகள்கள் மற்றும் அவரது தாய். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கில் வி.ரவீந்திரன் மூலமாக ரூ.2,00,00,000 கேட்டு மனு தாக்கல் செய்தார். இன்று மாவட்ட நீதிபதி சாய்சரவணன் இலவச சட்ட உதவி மைய செயலாளர் சார்பு நீதிபதி முரளிதரன், மற்றும் மாவட்ட நீதிபதிகள் உரிமையியல் நீதிபதிகள், முன்னிலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் லாரியின் காப்பீட்டு கழகமான ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பனி இறந்து போன கணேஷ் மனைவி, பிள்ளைகள் மற்றும் தாயார் ஆகியோர்களுக்கு நஷ்ஈடாக ரூ.1,30,00,000/ வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் வி. ரவீந்திரன் ஆஜரானார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது