மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 + ரூ.12,000 வரை உதவித்தொகை... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்புகள்!

 
உதவித்தொகை

தமிழ்நாடு அரசு, மாணவ, மாணவிகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில், மூன்று முக்கியமான நிதி மற்றும் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தக் கவர்ச்சிகரமான திட்டங்களில் பயன்பெறுவதன் மூலம், மாணவர்கள் தங்களின் படிப்பு மற்றும் தொழில் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.

1. முதலமைச்சரின் பொது நிவாரண நிதி: தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ. 50,000 நிதி

மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் தொழிற்கல்வி படிப்பைத் தொடர உதவுவதற்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு முறை மட்டும் தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

தகுதிகள்: ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு வழியாகத் தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் மெட்ரிக் அல்லது 7.5% சிறப்பு ஒதுக்கீடு கல்வி உதவித்தொகையைப் பெறாதவராக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

உயர்கல்வி உதவித்தொகை

2. பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM)

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் இன்று (08.12.2025 திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இந்த முகாம் மூலம் தொழிற்பழகுநராகத் தேர்வாகும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாகக் குறைந்தபட்சம் ரூ. 10,560/- முதல் ரூ. 12,000/- வரை வழங்கப்படும்.

தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், அத்துடன் 8, 10, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம். மேலும் விவரங்களுக்கு 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கல்வி உதவித்தொகை

3. தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்: மாதம் ரூ. 25,000 வரை உதவித்தொகை

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்களின் திறனைப் பயன்படுத்தும் வகையில் "தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ. 10,000 வீதம் (6 மாதத்திற்கு) உதவித்தொகை வழங்கப்படும். முனைவர் பட்டம் மற்றும் மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ. 25,000 வீதம் (3 வருடத்திற்கும்) உதவித்தொகை வழங்கப்படும்.

மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் fellowship.tntwd.org.in என்ற புதிய இணையதளத்தின் மூலம் டிசம்பர் 12, 2025 வரை வரவேற்கப்படுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!