கோழி பிடிக்க சென்றதில் பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

கோழி பிடிக்கச் சென்றதில் பள்ளி மாணவர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் தங்கியிருந்து, தோட்டத்தைப் பராமரிக்கும் வேலையை செய்து வருபவர் கோபால். இவரது 14 வயதுடைய மகன் சந்தோஷ்குமார்.
இந்த தோட்டத்தில் திறந்த வெளியில் பெரிய கிணறு ஒன்று இருந்த நிலையில், பள்ளிக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த சந்தோஷ் குமார், கிணற்றின் மீது நின்று கொண்டிருந்த கோழி கிணற்றுக்குள் விழாமல் இருப்பதற்காக அதனை துரத்த முயன்ற போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
தங்கள் கண் எதிரே மகன் கிணற்றுக்குள் விழுந்ததைக் கண்ட பெற்றோர் பதறியடித்தப்படி சந்தோஷை மீட்க முயன்றுள்ளனர். தங்கள் முயற்சி தோல்வியடையவே உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இருங்காட்டுக்கோட்டையில் இருந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கியிருந்த சந்தோஷ்குமார் உடலை சடலமாக மீட்டனர்
சந்தோஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோழியை காப்பாற்ற சென்றபோது திடீரென கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!