கொடூரம்... பள்ளி மாணவன் குத்திக்கொலை ... கோவில் திருவிழாவில் அதிர்ச்சி !

இந்த விழாவில் கலந்து கொள்ள விஷ்ணு பரத் கோவிலுக்கு சென்றார். அப்போது சாமிநாதபுரம் பகுதியை சேந்த ஆட்டோ டிரைவர் சந்துரு அங்கு குடிபோதையில் வந்திருந்தார். அங்கிருந்த விஷ்ணுவிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றிய நிலையில் சந்துரு தனது கையில் இருந்த ஒரு கூர்மையான கம்பியால் மாணவனை குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தால் திருவிழா பாதியிலேயே நின்றுவிட்டது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் சந்துரு தலைமறைவானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் சந்துருவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!