டிராக்டர் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவர் பரிதாபப் பலி!!

 
மனோஜ் பாண்டி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அரியூர் கிராமத்தில் வசித்து வருபவர்  மாரிச்சாமி. இவருடைய  மகன் 15 வயது மனோஜ்பாண்டி  10ம் வகுப்பு படித்து வருகிறார்.  மனோஜ்குமார், தன் நண்பனுடன் வயலுக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரது நண்பன்    வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருத்தப்பாண்டி  சொந்தமான டிராக்டரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தான். மனோஜ்பாண்டி அவருடன் பின்னால் அமர்ந்திருந்தார். திடீரென டிராக்டரில் இருந்து தவறி  டிராக்டர் சுழல் கலப்பையில் விழுந்தார்.

மனோஜ் பாண்டி

ஆனால் அவரது நண்பரால் டிராக்டரை நிறுத்த முடியவில்லை. கலப்பையில் சிக்கி மனோஜ்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.  அலறி அடித்து கொண்டு அவரது நண்பர் பெற்றோரிடம் தெரிவித்தார்.  காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  உயிரிழந்த  மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

மனோஜ்பாண்டியின் தந்தை மாரிச்சாமி புகார் அளித்துள்ளார் . இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  டிராக்டர் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web