5 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை.. குஷியில் மாணவர்கள்!
நாளை முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா களைக்கட்ட துவங்கி உள்ள நிலையில், நாளை 14-ந்தேதி போகிப் பண்டிகை முதல் விடுமுறை தொடங்குகிறது. ஜனவரி 15ம் தேதியும், மாட்டுப் பொங்கல் 16-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொங்கல் பண்டிகை காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

தொடர்ந்து, 19-ந்தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
