வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை! அலறிய மாணவிகள்!

 
ஸ்ரீவர்சா

கோவை துடியலூர் அடுத்த உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீவர்சா (21). பெற்றோருடன் வசித்து வந்த இவர், தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்றும் ஸ்ரீவர்சா வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக, கல்லூரி வகுப்பறையில் இருந்த ஸ்ரீவர்சா திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். 

இதனை பார்த்த சக மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூச்சலிட்டதால் நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஸ்ரீவர்சா விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர். 

ஸ்ரீவர்சா

இதனையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீவர்சா உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரதுஉறவினர்கள், சக மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவர்சா

இதனிடையே, இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீவர்சாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்ததாகவும், அதில் விருப்பம் இல்லாத நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். எனினும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web