ஏரியில் நீர் விமானம் விபத்து… 2 விமானிகள் படுகாயம்!
இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான நுவரெலியாவில் உள்ள கிரெகரி ஏரியில் இன்று நீர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஏரியில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் நேரடியாக நீருக்குள் விழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானத்தில் இருந்த 2 விமானிகள் காயமடைந்தனர். அருகில் ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் நுவரெலியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல வந்திருந்தபோதே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இரு விமானிகளின் உடல்நிலை தற்போது நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
