இரண்டாம் பிறவி.. வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை..19 நாட்களுக்கு பின் உயிர் பிழைத்தது!

 
வாஷிங்

டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்து 15 நிமிடங்கள் மூழ்கிய நிலையில் கிடந்த குழந்த 19 நாள்கள் பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, சோப்பு தண்ணீர் வாஷிங் மெஷினில் தவறி விழுந்தது. குழந்தையை தேடிய பெற்றோர் சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு குழந்தையை கண்டுபிடித்து மீட்டனர். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததால், பதறிய பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாஷிங்

குறிப்பாக குழந்தை 7 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா மற்றும் வென்டிலேட்டரில் இருந்தது. பின்னர் வார்டுக்கு மாற்றப்பட்டு 12 நாள்கள் வார்டில் இருந்த குழந்தை, தனது தாயை அறிந்து பேசியது இது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

வாஷிங்

இதையடுத்து மருத்துவர்கள் குழந்தை பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து 19 நாள் போராட்டத்திற்கு பின்னர் அதிசயமாக உயிர் பிழைத்த குழந்தை தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது அங்கிருந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 
 

From around the web