இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்… அரசு எடுத்த அதிரடி முடிவு!

 
போராட்டம்

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறந்தபோதும், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.

நேற்றும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘நோ ஒர்க் – நோ பே’ அடிப்படையில் சம்பளம் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக சான்றிதழுடன் வர இயலாதவர்களைத் தவிர, வேறு எந்த வகை விடுப்பும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!