சீமான் பளீச் பதில்... விஜயலட்சுமி விவகாரத்தில் நேரம் கிடைக்கும்போது நேரில் பதிலளிப்பேன்!

 
சீமான்

 தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் ஒசூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் 2023ல் போராடினோம், திமுகவை நம்ப முடியாது, இந்தி எதிர்ப்பு கொள்கையில் நிலைப்பாடு இல்லாமல் உள்ளார்கள். மும்மொழி கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு, கல்வி நிதி வழங்காததை கண்டித்து நாங்கள் எழுச்சியுடன் தனியாக போராடுவோம். மத்திய அரசு ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே ரேஷன், ஒரே கல்வி என்றால் ஒற்றுமை வளர்ச்சி வந்துவிடுமா என்பது வேடிக்கையாக உள்ளது.

சீமான்

தேர்தலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள எத்தனையோ உள்ளன. மனித கழிவுகளை இயந்திரத்தில் அள்ளும் அமெரிக்கா, வாக்கினை சீட்டில் பதிவு செய்கிறார்கள். வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பானும் வாக்குசீட்டில் தான் தேர்தலை சந்திக்கிறார்கள். வாக்கு இயந்திரம் பயன்படுத்தும் இந்தியா, நைஜீரியா இரண்டு நாடுகள் தான் ஊழலில் சிக்கி உள்ள மோசமான நாடுகள். 

சீமான் விஜயலட்சுமி


மத்திய அரசில் பாஜக, காங்கிரஸ் என யார் இருந்தாலும் தமிழ்நாடு என்றால் வெறுப்பையே காட்டுகிறார்கள். வளங்கள், வரி மட்டும் வாங்கிக்கொண்டு உரிமையை கேட்டால் நிராகரிக்கிறார்கள். காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் தமிழகத்திற்கு ஆதரவாக பேசினால் பாஜக வெல்லும். பாஜக பேசினால் காங்கிரஸ் வெல்லும். மீனவர்களின் கைது பற்றி பேசாதவர்கள் வாக்கிற்காக வாசலில் நிற்பதையே விஜய் சிறுபிள்ளை சண்டை என்கிறார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்   போலீசார் கொடுத்த சம்மனுக்கு நான் ஆஜர் ஆகவில்லை. இது குறித்து பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். இந்த விளையாட்டை  நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை, நேரம் கிடைக்கும்போது நேரில் பதிலளிப்பேன்” எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web