விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழுங்கள் ... சீமான் ஆவேசம்!

 
சீமான்

  
 
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு, பெரியார் பற்றி  விமர்சனங்களை சீமான் முன்வைத்து பேச துவங்கியதில் இருந்து  இந்த விலகல்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில்  நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆரம்பித்து மாநில பொறுப்புகளில் இருப்பவர்கள் வரையில் பலரும் விலகி மாற்றுக்கட்சிக்கு செல்லும் நிலை தொடர்கிறது. சமீபத்தில்  காளியம்மாள் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது  அழைப்பிதழில் கூட  சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.

சீமான்


இதுகுறித்தும் பல்வேறு கேள்விகள் சீமான் முன் எழுந்த போது, யார் விலகினாலும் தவறில்லை. அது அவர்கள் விருப்பம் என மழுப்பலாக பதில் கூறினார். மேலும் இது எங்கள் கட்சிக்கு களை உதிர் காலம்   எனக் கூறினார்.
இன்று சென்னையில் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட சீமானிடம்   காளியம்மாள் பெயர் சமூக செயற்பாட்டாளர் என்று இருந்தது குறித்தும், சமீப காலங்களில், அதாவது விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து நாம் தமிழர் கட்சியில் விலகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது.  

சீமான்


அதற்கு  சீமான்,  ” நம்ம கட்சியில் வேண்டாம் என சில பேரை நாங்கள் நகர்த்துகிறோம். அதுக்கப்புறம் அவங்க எந்த கட்சிக்கு போறாங்கனு நமக்கு தெரியாது. அவர்கள் கட்சிக்கு வேண்டும் என்றால் விளக்கம் கேட்கலாம். வேண்டாம் என்றால் விலக்கி தான் வைக்க வேண்டும். கட்சியை நடத்தும் போது யார் யார் தேவை, யார் தேவையில்லை, யார் நீண்ட தூரம் பயணித்து கட்சியை கொண்டு போவதற்கு சரியான ஆள் என கட்சி முடிவு எடுக்கும். இது நாட்டிற்கு பெரிய பிரச்சனை இல்லை. விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழுங்கள் என்று தான் கூற வேண்டும். ” என பதில் அளித்தார்.
அடுத்ததாக சாதிய பாகுபாடு நாம் தமிழர் கட்சியில் பார்க்கப்படுவதாக ஒரு மாவட்ட நிர்வாகி குற்றம்சாட்டியது குறித்து  சீமான் “சாதி பார்த்து தான் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பொது தொகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஆதிகுடிகளை வேட்பாளர்களாக நிற்க வைத்தேனா? வெளியே போகும் போது இக்கட்சி நல்ல கட்சி என்றா கூறமுடியும், அப்புறம் ஏன் வெளியே வந்தீங்கன்னு கேப்பீங்க.., அதுக்காக என் மீதோ, கட்சி மீதோ சில அவதூறுகளை பரப்புகிறார்கள்.” என சீமான் ஆவேசமாக கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web