நாதகவிலிருந்து காளியம்மாள் விலகல் குறித்து சீமான் பரபரப்பு பேட்டி!

 
காளியம்மாள்

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து மதுரை விமான நிலையத்தில் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகையில், “எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் செல்லலாம் முழு சுதந்திரம் உள்ளது. காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதா, தொடர்வதா என்கிற முடிவெடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்” என்று சீமான் பேசியுள்ளார். 

முன்னதாக பழனி செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “தனியார் பள்ளிகளில் இந்தி  இருப்பதாகஅண்ணாமலை சொல்கிறார் அதற்கு அனுமதி கொடுப்பது யார் மத்திய அரசு தானே.

காளியம்மாள்

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆரம்பத்தில் இருந்து ஹிந்தி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கலாம் ஆனால் அப்போது எதிர்க்காமல்தேர்தல் வருவதால் தற்போது இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.தொடர்ந்து பேசிய சீமான் இந்தி தான்இந்தியாவின் மொழி என்றால் என்னுடைய மொழி என்ன ஆயிற்று

பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மொழிபிரச்சனை தான். மும்மொழி கொள்கையால்தமிழ் படிப்பதற்கு வாய்ப்பில்லை என்ற சூழல் வரும் போது எம் மொழி என்னவாகும் எனக்கு கேள்வி எழுப்பிய சீமான், அந்தந்த மாநில மொழிக்கு முன்னுரிமை கொடுத்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும். இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் தான் வருகிறது” என்றார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக அந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கட்சியில் இருக்க விருப்பம் இல்லை என்றால் அவர்கள் விலகுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது.காளியம்மாள் கட்சியில் இணைத்தது நான் தான்  ...கட்சியிலிருந்து விலகுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது. இலையுதிர் காலம் என்பதால் கிளைகள் உதிரத்தான் செய்யும்.இந்த கட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகலாம் விருப்பப்பட்டவர்கள் கட்சிக்கு வரலாம் என தெரிவித்தார்.

காளியம்மாள்

போர் குணம் மிக்க ஒரு இனம் உள்ளது என்றால் அது தமிழினம் தான் . அந்த காலத்தில் இருந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து போராடுபவர்கள் தமிழ் இனம் தான். விளம்பர பலகைகள் கூட ஆங்கிலத்தில் வைத்து எங்களது மொழியை அழித்து விட்டீர்கள்

சமஸ்கிருதம் பேசுபவர்கள் குறைந்தவர்கள்தான். ஆனால் பாராளுமன்றத்தில் சமஸ்கிருத மொழியில் கல்வெட்டு வைக்கிறார்கள்.மொழியை வைத்து பிரிப்பவர்கள் நாங்களா? நீங்களா? என மோடிக்கு கேள்வி எழுப்பிய சீமான்

என்னுடைய வளம் எல்லாருக்கும். ஆனால் நீர்வளம் அவரவருக்கு மட்டும்தானா? என்றார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் விரட்டியதால் தான் வழக்கை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமி கூறியது குறித்து கேள்வி எழுப்புகையில், “இது தொடர்பாக நான் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கிறேன்” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web