சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது... விஜய் பேச்சு!

 
விஜய்


தவெகவின் 2வது ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில்  நிர்வாகிகள் மத்தியில் கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால்,சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

விஜய்

1967, 1977 பாணியில் தமிழகத்தில்  2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வருவோம். தவெகவில் இளைஞர்களே அதிகம், நமது கட்சி ஒன்றும் பண்ணையார்கள் கட்சி அல்ல. பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவது தான் நமது முதல் வேலை. அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதும் அவர்களின் பின்நின்றவர்கள் இளைஞர்களே. மொழி விவகாரத்தில் பேசி வைத்து திமுக, பாஜக அரசுகள்  மக்களை ஏமாற்றுகிறார்கள். கல்வி நிதி விவகாரத்தில் குழந்தை தனமாக சண்டையிடுகின்றனர்.

விஜய்  ஜனநாயகன்

பாஜகவும், திமுகவும் பேசி வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி ஹேஷ் டேக் போட்டு விளையாடுகின்றனர். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web