ஏப்.26, 27ல் கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு... விஜய் பங்கேற்பு!

தவெக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கோவை குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில், வரும் 26, 27 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. முதல் நாள் கட்சியின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அதன்படி, வரும் 26ம் தேதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களை ச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இரண்டாம் நாளில், கரூர் மேற்கு, கரூர் கிழக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை புறநகர் கிழக்கு, கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் மேற்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் மாநகர், நீலகிரி கிழக்கு, நீலகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசுகிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக் கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் குறித்தும் அவர் பேச உள்ளார்.
இது குறித்து தவெக நிர்வாகிகள் கூறும்போது, "இந்த கருத்தரங்கு மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இருநாள் கருத்தரங்கில் பூத் கமிட்டி பணிகள் குறித்து, பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்" என்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!