குமரியில் பரபரப்பு... பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்?!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த 10ம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பிளஸ் 2 மாணவருடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்று மாயமானதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அருமனை அருகே தனது 2வது கணவருடன் வசித்து வருகிறது. இவருடன், முதல் கணவர் மூலம் பிறந்த 15 வயது மகள் தங்கியிருந்து பள்ளியில்10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தற்போது விடுமுறை என்பதால் தினமும் தாயின் செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த மாணவி, இன்ஸ்டாவில் பக்கத்து ஊரில் வசிக்கும் ஆண் நண்பர் ஒருவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார்.
இந்த விஷயம் மாணவியின் தாய்க்கு தெரிந்து, மாணவியைக் கண்டித்த நிலையில், வீட்டில் இருந்த மாணவியை திடீரென வெளியேறியுள்ளார்.
மகளைப் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து அருமனை காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்தார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியுடன் பேசிய மாணவனும் திடீரென மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!