எஸ்.இ.டி.சி ஸ்லீப்பர் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு!

 
ஸ்லீப்பர்
 தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்லீப்பர்

பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், தனியாரிடம் இருந்து 20 ஏசி அல்லாத ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. இவை சென்னை உட்பட  முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எஸ்.இ.டி.சி கீழ் தற்போது 1,080 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஸ்லீப்பர்

இதுகுறித்து  எஸ்.இ.டி.சி மூத்த அதிகாரி  “ தற்போது ஏசி அல்லாத சொகுசு பேருந்துகளுக்கு தான் அதிக எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. ஆனால் போதிய எண்ணிக்கையில் நான் -ஏசி பேருந்துகள் இல்லை. எனவே தான் தனியாரிடம் 20 ஏசி அல்லாத சொகுசு பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநரையும் சேர்த்து தான் வாடகைக்கு எடுக்கிறோம். ஒரு கிலோமீட்டர் இவ்வளவு தொகை என ஒப்பந்தம் போடப்படும்" எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web