வாட்ஸ்அப்பில் அழகிகள் புகைப்படம் அனுப்பி பாலியல் தொழில்.. இளம்பெண் புரோக்கராக செயல்பட்ட அதிர்ச்சி!

 
சாரதா

சென்னையில் பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனை தடுக்க காவல்துறையின் தனிப்பிரிவு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் அழகு நிலையம், அடுக்குமாடி குடியிருப்பு என பல இடங்களில் போலீசாருக்கு டிமிக்கிகொடுத்து பாலியல் தொழில் களைகட்டுகிறது.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஸ்பா சென்டருக்கு ஆண்கள் நடமாட்டம் அதிகரித்தது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வந்து செல்வதாகவும், கார்கள் அடிக்கடி வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தது. 

சாரதா

அதன்பேரில், விருகம்பாக்கம் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அந்த ஸ்பா சென்டருக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து ஸ்பா சென்டர் நடத்திவந்த புது வண்ணாரப்பேட்டையை சாரதா என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஸ்பா சென்டரையும் முறையான அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தி வந்தது தெரிய வந்தது. 

சாரதா

மேலும், வாட்ஸ்அப் குழு மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இளம்பெண்களின் புகைப்படங்கள், பணம் தொடர்பான விவரங்களையும் அனுப்பி பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சாரதாவை போலீசார் அதிரடியாக செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web