சிறுமிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் வியாபாரி கைது!
May 8, 2025, 16:20 IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி 3ஆவது செக்கடி தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரியப்பன் (51). மளிகைக் கடை நடத்திவரும் இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மாரியப்பனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web