தமிழகத்தில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குழந்தை , இளம்பெண்களுக்கு பாலியல் பயங்கரம்!

 
பாலியல்

 
தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்   அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.அதன்படி மயிலாடுதுறை காவல் எல்லைக்கு உட்பட்ட சீர்காழி அருகே அங்கன்வாடி ஒன்றில் மூன்றரை வயது குழந்தை படிக்க சென்றது.  நேற்று திடீரென அந்த குழந்தையை அங்கு அருகில் காணவில்லை என தேடிய போது   அங்கன்வாடி அருகே பலத்த காயத்துடன் குழந்தையை மீட்டெடுத்தனர். முதலில் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து பிறகு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர்.

பாலியல்


அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அங்கன்வாடி அருகே காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்த குழந்தையின் உறவினர் என 17 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில், 17 வயது சிறுவன் தான் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்தது என்றும், குழந்தை சத்தம் போட்டதால் கல்லால் அடித்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர். 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரெட்டியூர் எனும் மலை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளின் பெற்றோர், குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அதில், அப்பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய பிரபு என்பவர் மாணவிகளிடம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர்.

பாலியல் பலாத்காரம்
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வ புகார் பெற்று, நேற்று ஆங்கில ஆசிரியர் பிரபுவை கைது செய்தனர். அவர் மீது போக்ஸோ உட்பட  4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி கோவில்பட்டி பகுதியில் காதல் திருமணம் செய்த தம்பதி, தங்கள் 6 மாத குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர்.  இதில் பெண்ணின் கணவர் கேரளாவுக்கு வேலைக்கு சென்றதால் பெண் தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்  . இதனை அறிந்த 2 நபர்கள் ஒருநாள் பகலில் வீடுபுகுந்து குழந்தை கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இரண்டு பேரையும்  நள்ளிரவிலும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.


இந்த விஷயத்தை கணவரிடம் பெண் கூறியுள்ளார். உடனே கணவர் ஊர் திரும்பியதும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவல் கொண்டு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மாரிச்செல்வம், மாரியப்பன் எனும் இருவர் என தெரிந்தது . அப்போது, மாரிச்செல்வம் போலீசாரை தாக்க முற்பட்டதால், போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாரியப்பன் தப்பியோட முயன்றபோது தவறி விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web