13 வயசில் பாலியல் தொல்லை... படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு கசப்பான அனுபவம்!

 
யாஷிகா

தன்னுடைய 13 வயதில், படப்பிடிப்பில் சிறிய ரோல் ஒன்றில் நடித்த போது,  தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்து, பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், ஆரம்ப காலங்களில் மாடலிங் செய்து கொண்டிருந்து, அதன் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். இவர் நடித்த, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘லெஜெண்ட்’, ‘சில நொடிகளில்’ உள்ளிட்டப் படங்கள் இவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.

யாஷிகா

கடந்த வருடம் பார்ட்டி முடித்து திரும்பியவரின் கார் விபத்துக்குள்ளாகி, காரில் இவருடன் பயணித்த இவரது நெருங்கிய தோழி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தில் நடிகை யாஷிகாவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது மீண்டு வந்துள்ளார். மீண்டும் திரைப்படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் கைவசம், ‘இவன்தான் உத்தமன்’, ‘பாம்பாட்டம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது 13வது வயதில், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

யாஷிகா

“நடிகர் சந்தானத்துடன் 'இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தேன். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. அப்போது, ஒருவன் என்னைத் தவறான இடத்தில் தொட்டான். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. உடனே, அவனை நான் எட்டி உதைத்துவிட்டேன். 13 வயதில் என் தைரியத்தை நினைத்து நான் பாராட்டுகிறேன். நான் மட்டுமல்ல, பெண்களுக்கு எப்போதுமே தைரியம்தான் முக்கியம்” எனப் பேசியுள்ளார் யாஷிகா.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web