பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டால் 4 நாட்களில் இடைநீக்கம்... பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு !

அரசு பள்ளிகளில் இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. அரசு பள்ளிகள், பேருந்துகள் போன்ற இடத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் 4 நாட்களுக்குள் இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தப்புகார்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இது காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!