இன்று சங்கர்ஜிவால் புதிய டிஜிபியாக பொறுப்பேற்பு!!
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவின் பணிக்காலம் இன்று ஜூன் 30ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இவரை அடுத்து அந்த பதவிக்கு சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சங்கர் ஜிவால் வகித்து வரும் சென்னை காவல் ஆணையர் பதவிக்கு, ஆவடி மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான பணி உத்தரவு ஆணை நேற்று வெளியிடப்பட்டது.
புதிய டிஜிபி- யாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால், உத்ரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் .1990 பேட்ச்சில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற சங்கர் ஜிவால் மன்னார்குடியில் ஏஎஸ்பி ஆக தனது பணியை தொடங்கினார். சேலம் மாவட்ட எஸ்பி ஆகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்ததுடன் உளவுத்துறை ஐஜியாகவும் பணிபுரிந்தவர். பின்னர் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சங்கர் ஜிவால் ஆயுதப்படையில் சேர்ந்தார். 2021 ல் டிஜிபி அந்தஸ்தை பெற்று சென்னை மாநகரின் 108வது காவல் ஆணையராக பதவி ஏற்றார்.
சத்தியமங்கலத்தில் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக 6 ஆண்டுகள் சங்கர் ஜிவால் பதவி வகித்தவர். பி.இ., மெக்கானிக்கல் முடித்த ஜிவால், மேலாண்மையில் டிப்ளமா, எம்எஸ் ஆராய்ச்சி படிப்பையும் முடித்தவர்.
அவர் காவல்துறையை தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்தியவர். போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், ரவுடிகளுக்கு எதிராகவும் மற்றும் சைபர் கிரைம் பிரிவில் பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து கவனம் ஈர்த்தவர். அத்துடன் சென்னையில் சிற்பி, அவள், பறவ, மகிழ்ச்சி, ஆனந்தம், காக்கும் காவல் கரங்கள் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியவர். இன்று தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பேற்கிறார்.இன்றைய தினம் அனைத்து பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு சைலேந்திரபாபு விடை பெறுகிறார்.சைலேந்திர பாபுவுக்கான பிரிவு உபச்சார விழா இன்று மாலை சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!