சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் பதற்றம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக என்சிபி தரப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தேவையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சரத் பவார் விரைவில் நலமடைய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
