அயோத்தியில் சாஸ்திரத்தை மீறிட்டாங்க... சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு... !

 
அயோத்தி

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜனவரி 22 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அத்துடன் அன்றைய தினம் ராம் லல்லா சிலை   பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சாஸ்திரத்தின் படி இச்செயல் ஏற்புக்குரியதல்ல என   பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார்.   அதே போல் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி  ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக கூறியுள்ளார்.  ராமர் கோவில்  இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும்  அதே நேரத்தில் லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடனும்  கட்டப்பட்டுள்ளது.  ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில்  3 அடுக்குகளைக் கொண்டது.

அயோத்தி

இந்தக் கோவில்  ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில்  மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணல் கற்களை  கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன. பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம்,   250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.  ஜனவரி 22 ல்  அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்த்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி   ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் வைத்துள்ளார்.  இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.  

அயோத்தி

கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என புகார் வைத்துள்ளார். ஜனவரி 22 ல்  நடைபெறும் நிகழ்ச்சியில் 4  சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்தத் தீய எண்ணமும் இல்லை.  கோவிலை கட்டி முடிக்காமல் ராம பிரான் பிரதிஷ்டை விழாவை நடத்துவது இந்து மதத்தின் முதல் மீறல் ஆகும்.   மேலும் 1992 இல் கட்டிடம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.  சூழ்நிலைகள் மற்றும் அதனால் சங்கராச்சாரிகள் யாரும் அந்த நேரத்தில் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ராமர் கோயில் கட்டும் பணியை முடித்துவிட்டு பிரான் பிரதிஷ்டை செய்ய போதுமான நேரம் உள்ளது.  இப்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது, முழுமையடையாத கோவிலை திறந்து வைத்து அங்கு கடவுள் சிலையை நிறுவுவது மோசமான யோசனை . மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, அதே நேரத்தில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது, "என சங்கராச்சாரியாரான அவிமுக்தேஸ்வரானந்த் தெரிவித்துள்ளார்.  
 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web