அதிர்ச்சி!! 24 மணி நேரத்தில் 1134 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று!!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் கடந்த சில வாரங்களாக .7%லிருந்து 1.9% ஆக அதிகரித்துள்ளது. இதில் தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 20ம் தேதி திங்கட்கிழமை 34 பேருக்கு டெல்லியில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 682,715,331. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6,821,190. உலக நாடுகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 655,686,679.
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 80,612 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தென்கொரியாவில் மட்டும் 12,016 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதெ நேரத்தில் இந்தியா முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க