அதிர்ச்சி!! லேப்டாப் பையில் குழந்தையின் சடலம்!!
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பெற்றோர்களே எச்சரிக்கையா இருங்க . அந்த காலத்தில 10 அல்லது 15 பிள்ளைகளை அசால்ட்டா சாதாரணமா வளர்த்தாங்க. இன்னைக்கு ஒரே ஒரு குழந்தைய பத்திரமா, பாதுகாப்பா நம்மால வளர்க்க கூடிய சூழல் இல்ல என்பது தான் வேதனையான உண்மை.
உத்தரப்பிரதேசம் சூரஜ்பூர் தேவ்லா கிராமத்தில் ஏப்ரல் 7ம் தேதி 2 வயது குழந்தையை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறையில் புகார் அளித்தனர். எங்கெங்கோ தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறை லேப்டாப் பையில் குழந்தையின் சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தது. பக்கத்து வீட்டு உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!